search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்உற்பத்தி பாதிப்பு"

    • அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது.
    • உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின்நிலைத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் உள்ள 5-வது மின்சார உற்பத்தி எந்திரம் பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களும் இயங்கி வந்தன. நேற்று காலையில் 3-வது மின்உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் திடீரென ஓட்டை விழுந்தது. இதையடுத்து அந்த மின்உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது.

    இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக மின்உற்பத்தி எந்திரத்தில் பழுதுநீக்கும் பணியில் அனல்மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இரவில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
    • என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு, தற்போது உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு 80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால், நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தை சீராக உற்பத்தி செய்ய முடியும்.

    என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    மேலும் வேலைவாய்ப்பில் 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் தமிழர்கள். அதுபோல் நிரந்தர தொழிலாளர்களிலும் 83 சதவீதம் பேர் தமிழர்கள் தான் உள்ளனர். தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு இல்லை என்பதில் உண்மை இல்லை.

    நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தால், பற்றாக்குறையான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்.எல்.சி. நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கின்றது. அதே வேளையில் மின்சாரத்தை தமிழக அரசு, வெளிச்சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு 10 அல்லது 12 ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாவதற்கு வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில், முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 2-வது நிலையில் உள்ள 2-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அந்த அலகில் ஏற்பட்டு உள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இப்பகுதியில் தண்ணீர் தேக்கி லோயர்கேம்ப் மின்பவர் ஹவுசில் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கடந்த 28 நாட்களாக இங்கு மின்உற்பத்தி நடைபெறாததால் மின்இழப்பு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதேபோல லோயர்கேம்பில் ெதாடங்கும் முல்லைபெரியாற்றில் குருவனூத்து பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுகாடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 4 இடங்களில் மினிபவர் ஹவுஸ் உள்ளது.

    பெரியாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது இப்பகுதியில் தண்ணீர் தேக்கி மின்உற்பத்தி செய்யப்படுகிறது. குருவனூத்து பாலம் அருகே மினிபவர் ஹவுசில் தலா 2 மெகாவாட் வீதம் 4 மெகாவாட் மின்உற்பத்தி செய்யமுடியும். முல்லைபெரியாற்றில் இருந்து கடந்த 1-ந்தேதிமுதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு 1000 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த 28 நாட்களாக இங்கு மின்உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் இங்கு மின்இழப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற 3 மினிபவர் ஹவுசிலும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மின்உற்பத்தி நடக்காதது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 128.40 அடியாக உள்ளது. வரத்து 272 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 4352 மி.கனஅடி.

    வைகை அணை நீர்மட்டம் 53.25 அடி, வரத்து 505 கனஅடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 2468 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.50அடி, வரத்து 20 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 85.11 அடி, திறப்பு 3 கனஅடி.

    ×